பதிவு செய்த நாள்
22
ஜூன்
2022
09:06
சென்னை: தமிழகத்தில் உள்ள, 150 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க, மாநில அளவிலான வல்லுநர் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புராதன, தொன்மையான கோவில்கள் திருப்பணி தொடர்பாக, மாநில அளவிலான வல்லுநர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில், கன்னியாகுமரி மாவட்டம், ஈஸ்வரி பத்ரகாளியம்மன் ஈசன் தங்கு, நெல்லை கோடாகநல்லுார் துர்க்கை அம்மன், கொண்டா நகரம் முப்பிடாதியம்மன்; தர்மபுரி மாவட்டம் கோட்டை பைரவ அள்ளி, சாக்க நாச்சியம்மன் உள்ளிட்ட, 150 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க, வல்லுநர்கள் குழு அனுமதி அளித்தது. இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, விரைவில் திருப்பணிகள் துவக்கப்பட உள்ளன. இக்கூட்டத்தில், திருப்பணி இணைக் கமிஷனர் ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.