கடையம்: சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் நாளை (23ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடையம் அருகே அமைந்துள்ள சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் – சிவசைலநாதர் சாமி கோவில் சிறப்பு மிக்க கோயில் ஆகும். சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயிலில் கடந்த 3ம் தேதி கும்பாபிஷேக கால்நாட்டுதல் வைபவம் நடந்தது.
19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. 20ம் தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று 22ம் தேதி (புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜைகள், 5ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை 23ம் தேதி (வியாழக்கிழமை) ஆறாம் கால யாக பூஜைகளும், விமான மகா கும்பாபிஷேகம் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர் நாறும்பூநாதன் பட்டர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.