ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2022 04:06
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று அன்னதான திட்டத்திற்காக மும்பையை சேர்ந்த ஜெயந்த் தத்தம் மங்கேஷ்கர் குடும்பத்தினர் காணிக்கையாக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினார் .இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்தம் பிரசாதங்களை வழங்கியதோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதமும் செய்தனர்.