மேலூர்: மேலுார், திருவாதவூர் கோயிலில் சேவை செய்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் அந்தந்த பிரிவை சேர்ந்தவர்களிடம் இல்லாததால் கோயில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு பழமையான பாண்டிய மன்னர் காலத்தை சேர்ந்த திருமறைநாதர் கோயில் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து இக் கோயிலுக்கு சேவை செய்யும் அர்ச்சகர், மெய்காவலர், ஒதுவார், மாலை கட்டி, கொள்ளுதச்சர் மற்றும் மேளம் வாசிப்பவர் உள்ளிட்டோருக்கு சம்பளத்திற்கு பதிலாக தலா 10 ஏக்கர் வீதம் 60 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. தற்போது இப் பிரிவை சேர்ந்தவர்களிடம் நிலம் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். மெய்க்காவல் புரியும் குமரேசன் கூறுகையில் – மூன்றாம் தலைமுறையாக சேவை செய்து வருகிறேன். தற்போது ஒரு மாதத்திற்கு ரூ.155 சம்பளம் தருகின்றனர். முந்தைய காலங்களில் சம்பளத்திற்கு பதிலாக அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து குடும்பத்தை நிர்வகித்தோம். தற்போது இந் நிலங்கள் தனியாரிடம் உள்ளதால் விவசாயம் செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிலங்களை மீட்க வேண்டும்.
பேஷ்கார் ஷாஜி கூறுகையில் – கோயில் நிலங்கள் குறித்து ஒரிரு நாளில் ஆய்வு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.