வேடசந்தூர்: வேடசந்தூர் கருக்காம்பட்டியில் எல்லைக் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முளைப்பாரி எடுத்தல், குடகனாற்றில் கரகம் பாலித்து வாணவேடிக்கையுடன் அம்மனை அழைத்து வந்து கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.