திருவந்திபுரம் கோவிலில் ரூ. 38.20 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2022 11:06
கடலுார், : கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டத்தில், ரூ. 38.20 லட்சம் இருந்தது. கடலுாரில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உண்டியல் ஆண்டிற்கு மூன்று முறை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் எண்ணப்பட்டது. கடலுார் மற்றும் பண்ருட்டி ஆய்வர்கள் சுபத்ரா மற்றும் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.அதில், ரூ. 38.20 லட்சம் ரொக்கம், 968 கிராம் தங்கம், 302 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியன, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.