பதிவு செய்த நாள்
23
ஜூன்
2022
12:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மண்டல பூஜை நடைபெற்றது. சிறுமுகை - சத்தியமங்கலம் மெயின் ரோட்டில், சின்னகள்ளிபட்டி ரங்கம்பாளையம் அருகே, செல்வகணேசபுரத்தில் புதிதாக, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 4 ம் தேதி நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜை செய்யப்பட்டு வந்தன. மண்டல பூஜை நிறைவு விழாவை அடுத்து, காலையில், 6:00 மணிக்கு நடை திறந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் அலங்காரம் பூஜை செய்தனர். பின்பு சுதர்சன ஹோமம் வேள்வி செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் கிருஷ்ணன், ரங்கப்பிரியன், வெங்கடேஷ் பிரசாத், கோடையிடி முத்துகிருஷ்ணன் ஆகியோர் மண்டல பூஜைகளை செய்தனர்.