கோவை : பீளமேடு ஹட்கோ காலனி, ஆனந்த ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.காலை 5:00 மணி முதல் கணபதி ஹோமம் துவங்கி, விநாயகர் மற்றும் சுற்று தெய்வங்களுக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.