கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ளது ஏகவள்ளி அம்மன் கோவில். அந்த கோவிலில், மூன்று நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில், நேற்று, கிராம பெண்கள் ஒன்று கூடி, கோவில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று, அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.