பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
10:06
உடுமலை : உடுமலை அருகே லட்சுமாபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி தாலுகா, சிஞ்சுவாடி ஊராட்சி, லட்சுமாபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, 21ம் தேதி முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது. 22ம் தேதி, இரண்டாம் கால ேஹாம பூஜை, காலை, 9:00 மணிக்கு ஆரம்பமானது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூன்றாம் கால ேஹாம பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மேல், கரிவரதராஜ பெருமாளுக்கு, பாவனா அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு மேல், மங்கள இசை, வேதபாராயணம், நான்காம் கால யாக பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், யாத்ரா தான சங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மேல், மகாகும்பங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு, கோபுர விமானம், மூல மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.