Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் இசக்கியம்மன் ... கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
11:06

ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. 


சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த3ம் தேதி கும்பாபிஷேக கால் நாட்டுதல் வைபவம் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை7.45 மணிக்கு திருப்பணியாளர்கள் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ௬ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பூஜையில் தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகஞான பரமாச்சார்ய சுவாமிகள், சென்னை ரெப்கோ நிறுவன சேர்மன் சிவசைலம், பவானி சிவசைலம், கோவை பைமெட்டல் பியரிங்ஸ் நிர்வாக இயக்குனர்குமார் (எ) நாராயணன், லட்சுமி நாராயணன், கல்யாணி, அண்ணல் அனந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேளதாளம் முழங்ககடம் புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சுவாமி விமானத்தில் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.


பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கோயில் அர்ச்சகர் நாரம்புநாதபட்டர் புனித நீர்ஊற்றினர். அம்பாள்விமானத்தில் கணேசபட்டர், ராஜகோபுரத்தில் சிவா சிவாச்சார்யகுழுவினரும் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலைசுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், திருவீதியுலா, அத்திரிமுனிவருக்கு சுவாமி அம்பாள் காட்சியளித்தல் நடந்தது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கிருஷ்ணவேணி, ஆய்வாளர் சரவணகுமார், செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கும்பாபிஷேக குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்,

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar