பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
05:06
ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில், மேருமலையை மத்தாக கடையும் போது, அதை தாங்கி நிற்பதற்காக பகவான் ஸ்ரீமந் நாராயணன் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்ந நாளினை நினைவுகூரும் விதமாக நாளை (ஜுன் 25ம் தேதி) கூர்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. திருமால் அவதரித்த தசாவதாரங்களில் 2-வது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை. அத்தகைய ஆமை வடிவம் கொணடு யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல், பல நன்மைகள் ஏற்பட காரணமாக இருந்து , அனைவரும் நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம். ஒருவரின் உருவ அமைப்பைக் கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த அவதாரத்தின் நோக்கம்.
இந்த நாளில் உங்கள் ஊர்களிலோ, இல்லத்தின் அருகில் உள்ள பெருமாளை வணங்கினால் சுபிட்சம் உண்டாகும். மேலும் தாயையும், குடும்பத்தை எந்த விதமான தந்தையையும் வணங்கி ஆசிபெறுவது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்களைக் கண்டு அவர்களிடம் ஆசி பெற உன்னதமான நாள். நற்குணங்கள் ஒருபுறமும் கெட்டகுணங்கள் ஒருபுறமும் இழுக்க, ஒரு பக்தன் சாதனை (பக்தி, யோகம், தவம்) செய்ய விருப்பம் கொண்டால், அதை இறைவனே பொறுப்பேற்று, தொடங்கி தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும் போது தானே ஏற்றி நடத்தி, விஷம் போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து , நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான். கூர்ம அவதாரத்துடன் தன்வந்திரி. மோகினி அவதாரங்கள் ஒருசேர நிகழ்ந்து இராகு - கேது கிரங்கள் உருவான நிகழ்வு உண்டு. கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திராவில் ஸ்ரீ கூர்மம் என்ற கோயிலும் இருக்கிறது.