Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி அமாவாசை வழிபாடு : 4 நாட்கள் ... முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி விழா: அம்மனுக்கு சக்தி கரகம் முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான சிவன் கோவிலில் மர்ம நபர்கள் புதையல் தேடி பள்ளம்
எழுத்தின் அளவு:
பழமையான சிவன் கோவிலில் மர்ம நபர்கள் புதையல் தேடி பள்ளம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2022
08:06

செஞ்சி: செஞ்சி அருகே பழுமையான சிவன் கோவில் கருவரையில் புதையல் எடுக்க மர்ம நபர்கள் பள்ளம் தோண்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்று பின்னனி கொண்ட செஞ்சி நகரம் வரலாற்று காலத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக இருந்துள்ளது. இதில் 9 முதல் 11ம் நுாற்றாண்டு வரை பல்லவர்களும், 14 மற்றும் 15ம் நுாற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் செஞ்சியை ஆட்சி செய்தனர்.

அப்போது செஞ்சி கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான சிவன் கோவில்களை கட்டி உள்ளனர். இதே போன்ற சிவன் கோவில் ஒன்று செஞ்சியை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில், வடகால் செல்லும் வழியில் உள்ளது. பல்லவர்கால கட்டடக்கலையுடன் காணப்படும் இந்த கோவில் படையெடுப்புகளின் போது இடித்து சின்னபின்னமாக்கி உள்ளனர். இடிபாடுகளுடன் இருந்த கோவிலின் சாமி சிலைகள் சிலவற்றை எடுத்து கோவிலுக்கு வெளியே வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கருவரை பீடத்தின் கற்களை நகர்த்தி விட்டு அதன் கீழே சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி புதையலை தேடி உள்ளனர். செஞ்சி பகுதியில் வழிபாடு இல்லாமல் இடிபாடுகளுடன் உள்ள கோவில்களில் புதையல் தேடுபவர்கள் அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற கோவில்களில் ஏற்கனவே போரின் போது செல்வங்கள் அனைத்தும் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு விட்டதால் தற்போது கருவரைக்குள் பொன், பொருள் இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவே. சோமசமுத்திரம் கோவிலில் புதையல் தேடி பள்ளம் எடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar