இடைக்காட்டூர் சர்ச்சில் 128ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2022 05:06
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலய 128ம் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வருடந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு 128ம் ஆண்டு திருவிழா நேற்று மாலை 6:30 மணிக்கு சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருத்தல அருள்பணியாளர் இம்மானுவேல் தாசன்தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திரு இருதய பெருவிழா, தேர்பவனி, திருவிழா நிறைவு திருப்பலி ஆகியவை வருகிற ஜூலை 1ஆம் தேதியும், ஜூலை 2ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெருவிழாவும் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களின் போது தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளர் இம்மானுவேல் தாசன்,மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், திரு இருதய பக்தர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.