பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
மேட்டுப்பாளையம்: புனித அந்தோணியார் ஆலயத்தில், நாளை தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் டேவிட் திருப்பலியை நிறைவேற்றி, கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சேவியர் கிளாடியஸ், புதன்கிழமை தம்பதியர் தினத்தை முன்னிட்டு ஆண்டனி செல்வராஜ், வியாழக்கிழமை நற்கருணை தினத்தை முன்னிட்டு விக்டர் ஆண்டனிராஜ், வெள்ளிக்கிழமை இரக்கத்தின் தினத்தை முன்னிட்டு அந்தோணி இயேசு ராஜ் ஆகிய பாதிரியார்கள், திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர். நாளை காலை, 8:00 மணிக்கு மேட்டுப்பாளையம் வரும் கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸுக்கு, வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, 8:15 மணிக்கு திருவிழா மற்றும் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி நடைபெற உள்ளது. கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், சிறுவர்களுக்கு புதுநன்மை, உறுதிப்பூசுதல் வழங்கி திருப்பலி நிறைவேற்ற உள்ளார். மாலை,5:30 மணிக்கு தேர் திருவிழா திருப்பலியை பாதிரியார் ஜானி சகாயராஜ் மற்றும் பல்வேறு பங்குப் பாதிரியார்கள் சிறப்பிக்க உள்ளனர். அதை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்காரம் செய்த புனித அந்தோனியார் தேர்பவனி செல்கிறது. பின்பு நற்கருணை ஆசீர் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் மற்றும் அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.