பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
தஞ்சாவூர்,கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடத்தில், புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ சுரேந்திர சதனா கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அன்னதானக் கூடம் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சோலையப்பன் தெருவில், 104 மகோன்னத கிரந்தங்களை எழுதி படைத்தவருமான ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்த சுவாமிகள், ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளின் பரம குருவானவர். சுமார் 84 ஆண்டுகள் பீடாதிபத்யத்தில் இருந்த ஸ்ரீ விஜயீந்த்ர சுவாமிகள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சோலையப்பன் தெருவில், பாவதிப ஆஞ்சநேயரை பிரதிஷ்ட்டை செய்து, பின்னர், பிருந்தாவனமாகி, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற மடத்தில் ஆண்டு தோறும் ஆராதனை மகாத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன் இத்தாண்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றம் விழா துவங்கியது. 24ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று (25ம்தேதி) காலை மூலராமர் பூஜை, இரவு ரதோத்சவமும், ஸ்ரீ கஷ்யப முனிவரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர். ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கும், ஸ்ரீ விஜயீந்த்ர, ஸ்ரீ ராகவேந்திரர் மூல மற்றும் ம்ருத்திகா பிருந்தாவனங்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சுரேந்திர சதனா என்ற வளாகத்தை ஸ்ரீஸ்ரீ சுபுதேந்த்ர தீர்த்த சுவாமிகள் திறக்கப்பட்டது.
26-ம் தேதி ஸ்ரீஸ்ரீ விஜயீந்த்ர சுவாமிகளின் மத்ய ஆராதனை விழா, கனகாபிஷேகம், இரவு தெப்போற்சவம், 27-ம் தேதி வீதியுலாவும், காலை 9 மணிக்கு பாவதிப ஆஞ்சநேய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகமும், 28-ம் தேதி காலை ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தருக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கொண்டு வரப்பட்ட வஸ்திரம் அணிவித்து, நிர்மால்ய விஸ்ர்ஜனம் பூஜைகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மண்டல மேலாளர் ராஜா எல்.சுசீந்தீரஆச்சார்யா தலைமையில் மடத்தின் மேலாளர் எஸ்.நரசிம்மன் மற்றும் பொறுப்பு மேனேஜர் ஆர்.மாதவன் மற்றும் ஊழியர்களும் பக்தர்களும் செய்துள்ளனர்.