பழநியில் ஆனி கார்த்திகை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2022 02:06
பழநி: பழநியில் ஆனி மாத கார்த்திகை, விடுமுறை நாள் முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பழநியில் ஆனி மாத கார்த்திகை, விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர். பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.