ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி சமேத ஸ்ரீ தர்ம ராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து 1.7. 2022 புதன்கிழமை வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்பட்டது .ஆனால் இவ்வாண்டு பக்தர்கள் அனுமதியோடு பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார். வரும் 1.7.2022 வெள்ளிக்கிழமை அன்று திரௌபதி சமேத தர்மராஜர் கோயிலில் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. 5.7 .2022 செவ்வாய்க்கிழமை அன்று திரௌபதி திருக்கல்யாணமும் 8.7. 2022 வெள்ளிக்கிழமை அர்ஜுனன் தவசு நடைபெறும் என்றும் இதனை தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் 10.7.2022 ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது .இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளை வெளியிட்டார் .இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.