மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.மதியம் 12:00 மணியளவில் மகா தீபாராதனைக்குப் பின்னர் மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மலை வலக்காட்சி நடந்தது.ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.