Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெய்யகம் ஆசிரமத்தில் குருபூஜை ... பிரதோஷம் : போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை பிரதோஷம் : போடி சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
12:06

பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆனிமாத இரண்டாவது பிரதோஷ பூஜை முன்னிட்டு, பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், பால், இளநீர், தயிர், அரிசி, திருமஞ்சன பொடி உட்பட ஒன்பது வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.ஜோதிநகர் விசாலாட்சியம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், சக்தி தேவியுடன் மலையாண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர். - நிருபர் குழு -

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதருக்கு நேற்று பிரதோஷ பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.காசிவிஸ்வநாதர் தேவியருடன் தேரில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை: உடுமலை காந்திநகரில் வரசித்தி விநாயகர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அமராவதிநகர் சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த சதாசிவ லிங்கேஸ்வரர் மற்றும் நந்திபகவானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கொமரலிங்கம் காசிவிஸ்வநாதர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar