காமாட்சி அம்மன் கோவில் அருகில் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 11:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இது ஆண்டு தோறும் நடக்கும் வழக்கமானதுதான் என ஒரு சில கடைக்காரர்கள் கூறினர். சன்னிதி தெருவில் உள்ள கடைக்கு வெளியில் நிழலுக்காக அமைக்கப்பட்ட கூரைகள் மற்றும் நடைபாதை கடைகளை எடுக்கும் படி அதிகாரிகள் கூறினர்.
போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அப்போது நடைபாதை கடை வைத்திருந்த ஒருவர் கூறுகையில்,எங்களுக்கு முன் அறிவிப்பு தெரிவிக்காமல் எப்படி கடை அகற்றலாம் என்றார். மேலும் ஆக்கிரமிப்பு என்று சொல்கிறீர்கள் நாங்கள் தினசரி மாநகராட்சிக்கு வாடகை செலுத்துகிறோம்.பின் எதற்கு வாடகை வாங்குகிறீர்கள் என கூச்சல் போட்டனர்.ாநகராட்சி அதிகாரிகள் அவர் கேட்டதற்கு பதில் எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் ஒரு கடைக்காரர், ஆண்டு தோறும் ஆக்கிரமிப்பு அகற்றுவது வழக்கம். அவர்கள் சென்னால் நாம் எடுக்கத்தானே செய்யனும் என்றார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை குறித்து கடைக்காரர்கள் பெரிதாக கருதவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் அதே இடத்தில் பழைய படி கடைகள் வந்து விடும் என கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு கடை கூரையை மாநகராட்சி ஊழியர்கள் பிரித்து கடைக்காரர்களிடம் ஒப்படைத்தனர். நேற்று நடந்த ஆக்கிரமிப்பு அகற்றம் பெயரளவிற்கு நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.