கனகம்மாசத்திரம் : கனகம்மாசத்திரம் அடுத்த, எல்லப்பநாயுடுபேட்டையில் அமைந்துள்ள மாத்தம்மன் கோவிலில், 25ம் ஆண்டு தீமிதி திருவிழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையடுத்து, சனிக்கிழமை, காலை 11:00 மணிக்கு போத்துராஜா பரசுராமன் கோலம் திருஷ்டி கழித்தலும், நேற்று முன்தினம், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு திருஷ்டி கழித்தலும் நடந்தன.நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டி இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.