பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
11:06
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், தேர் திருவிழா நடந்தது. மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தேர் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பாதிரியார் ஜானி சகாயராஜ் உள்ளிட்ட, 15 பாதிரியார்கள் திருப்பலியை நிறைவேற்றினர். பின்பு மின் அலங்காரம் செய்த தேரில், புனித அந்தோணியார் சுருபம் வைத்து, தீர்த்தம் தெளித்து மந்திரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, பஸ் ஸ்டாண்ட், அண்ணா மார்க்கெட், அண்ணாச்சி ராவ் ரோடு, செந்தில் தியேட்டர் ரோடு, ஊட்டி ரோடு வழியாக, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.