Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜமீன்பூதுாரில் துரியோதனன் படுகளம் ... ஊர்க்காடு கோயிலில் பத்ர தீபம் ஊர்க்காடு கோயிலில் பத்ர தீபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17 கோவில்களில் பணிகள் தீவிரம் : திருவள்ளூரில் ஹிந்து சமய அறநிலைய துறை சுறுசுறுப்பு!
எழுத்தின் அளவு:
17 கோவில்களில் பணிகள் தீவிரம் : திருவள்ளூரில் ஹிந்து சமய அறநிலைய துறை சுறுசுறுப்பு!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2022
10:06

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை வாயிலாக, 17 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த, 5.41 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5.14 கோடி : இந்த நிதியில், 1,000 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. பொன்னேரி வட்டம், எருமைவெட்டிப்பாளையம் வரமுக்தீஸ்வரர் கோவிலில் 1 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கோவில்களில் 5.14 கோடி ரூபாயில், கும்பாபிஷேக நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை: பெயர் குறிப்பிடாத ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கோவில்களில் 5.14 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.அதேபோல் நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர், கடம்பத்துார், மூர்த்தீஸ்வரர் ஆகிய இரு கோவில்களிலும், திருப்பணி மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில், வரும் ஜூலை 6ல் கும்பாபிஷேகம் நடத்த, திருப்பணிகள் துரிதமாக நடக்கின்றன.திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள கோவில்களிலும், திருப்பணிகள் நிறைவடைந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் பெயர் நிதி ஒதுக்கீடு தொகை ரூ.லட்சம்

திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம், கடம்பத்துார் 29.55
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி 74.00
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டார்குப்பம் 12.10
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சோரஞ்சேரி, பூந்தமல்லி 4.45
திருவாலீஸ்வரர் கோவில், பெருவாயல், கும்மிடிப்பூண்டி 7.82
சிங்கீஸ்வரர் கோவில், மப்பேடு, கடம்பத்துார் 33.45
கைலாசநாதர் கோவில், ஏகாட்டூர், கடம்பத்துார் 8.25
கைலாசநாதர் கோவில், செஞ்சிபானம்பாக்கம், கடம்பத்துார் 16.00
பிடாரி பொன்னியம்மன் கோவில், பாரிவாக்கம், பூந்தமல்லி 6.50
தேவிகருமாரியம்மன் கோவில், திருவேற்காடு 97.00
சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி 92.00
வடாரனேஸ்வரர் கோவில், திருவாலங்காடு 47.98
பர்வதீஸ்வரர் கோவில், மெதுார், திருவள்ளூர் 46.28
திருக்கச்சி நம்பிகள் வரதராஜபெருமாள் கோவில், பூந்தமல்லி 33.70
வரமுக்தீஸ்வரர் கோவில், அரியத்துறை, கும்மிடிப்பூண்டி 3.50
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை 1.10
திருவெள்ளீஸ்வரர் கோவில், திருவெள்ளைவாயல் 0.50

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar