திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை சோமப்பா சுவாமிகள் 54வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது. சோமப்பா சுவாமிகள் சமாதி அடைந்த தினம் . ஆண்டுதோறும் குருபூஜை விழாவாக நடத்தப்படுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து, யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலம் சிவபெருமானுக்கு அபிஷேகம் முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை வைகாசி விசாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் ராஜா குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, கட்டிக்குளம் கிராம பொதுமக்கள், மதுரை தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி நண்பர்கள், பக்தர்களின் பக்த மார்க்கண்டேயன் நாடகம் நடந்தது. சூட்டுக்கோல் ராமலிங்க விலாச மேனேஜிங் டிரஸ்டி தட்சிணாமூர்த்தி விழா ஏற்பாடுகள் செய்தார்.