பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
11:06
ஐதராபாத்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜய யாத்திரையாக கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
கர்நாடகத்தில், பல்வேறு இடங்களில் அருளாசி வழங்கி விட்டு, தெலுங்கானாவில் சில நாட்களாக அவர் முகாமிட்டு இருந்தார். ஜூன் 20 முதல் துண்டிகல் நகரில் தங்கி இருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் பிரதோஷ பூஜைகளை மேற்கொண்டார்.அந்த மாநிலத்தில் யாத்திரையை முடித்து, நேற்று ஆந்திர மாநிலம் புறப்பட்டார். ஜாகியாபேட் பகுதியில் உள்ள போலஸ்படு நகருக்கு நேற்று வந்த அவருக்கு, மாநில அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு, ஜூலை 2 வரை அவர் தங்குகிறார்; 3ல் எலுரு நகர் செல்கிறார். அங்குள்ள காஞ்சி காமகோடி பீடம் ஹெலாபுரி சமஸ்கிருத வேத பவனில் தங்கி அருளாசி வழங்குகிறார்.ஜூலை, 5, 6ல் சமர்லகோட்டா நகரிலும், 7 முதல் 9 வரை பெட்டாபுரத்திலும், 10 முதல் காக்கிநாடாவிலும் முகாமிடுகிறார். அங்கு தினமும் சந்த்ரமவுலீஸ்வர பூஜையும், ஜூலை 13ல் குருபூர்ணிமா சிறப்பு பூஜையும் செய்து, அன்று முதல் செப்., 10 வரை சாதுர்மாஸ்ய விரதமும் மேற்கொள்கிறார்.