தன்வந்திரி அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 01:06
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் ருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மூலவர் சரநாராயண பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தா ர். மதியம் 1:00மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. பலவகை மூலிகைகளால் த யாரிக்கப்பட்ட தன்வந்திரி மகாபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.