மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு நடந்த மகா தீபாராதனைக்குப் பின்னர் மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9:00 மணிக்கு உற்சவர் மலை வலக்காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகதளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.