நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 05:06
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை , சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப் பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். பூஜையை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.