Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் ... வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்காமல்அறநிலையத் துறை துாங்குகிறது: ஐகோர்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2022
06:06

சென்னை :கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அறநிலையத் துறை துாங்குகிறது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 18.72 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, சீனிவாசன் தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலுக்கு சொந்தமான இடங்களில், 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன; மீதமுள்ள நான்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வேண்டும்.மேலும், கோவில்களுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் கூறியதாவது:கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துாங்குகிறது.கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, வழக்குகள் தொடர்ந்து தாக்கல் ஆகிறது. துவக்கத்திலேயே ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டிய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்பளம் மட்டும் பெறுகின்றனர்; எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆக்கிரமிப்பு நடக்கும் வரை, அறநிலையத் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அதிகாரிகள் செயல்படுவது எதற்காக?வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள், முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கும், அறநிலையத் துறை அதிகாரிகள் சரிவர செயல் படாததே காரணம். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து விட்டு, இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது.இவ்வாறு முதல் பெஞ்ச் கூறியது.வழக்கு விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar