Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி உற்சவம் துவங்கியது ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்த தார்பாரில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்த தார்பாரில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
09:06

தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில், தர்பாரில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டத்தை நினைவு கூறும் விதமாக, நேற்று மந்திராலய பீடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர சுவாமிகளால் சிறப்பு பூஜை  செய்யப்பட்டது.

கடந்த 1621ம் ஆண்டு தஞ்சை நகரத்தில் வடவாற்றங்கரையில் சன்னியாச தீட்சைப் பெற்று வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஸ்ரீ ரகுநாத பூபால நாயக்க மன்னர் முன்னிலையில் நடந்தது. அன்றில் இருந்து "ஸ்ரீராகவேந்திரர்" என்ற பெயருடன் திகழ்ந்தார். தஞ்சையில் ஏற்பட்ட வறுமையை போக்கி சுமார் 12 ஆண்டுகள் இந்த பிருந்தாவனம் அமைத்துள்ள இடத்தில் தவம் புரிந்தார். தவத்தின் மூலம் கிடைத்த வலிமையை மற்ற தேசங்களில் மக்களுக்கும் அளிக்கும் பொருட்டு தேசசஞ்சாரம் புறப்பட்டார்.   ராகவேந்திரர் தஞ்சையை விட்டு புறப்பட்ட சில காலங்களிலேயே தஞ்சை மன்னருக்கு அவரின் பிரிவால் சில இன்னல்கள் ஏற்படுகின்றன. எனவே ஸ்ரீராகவேந்திரர் என்றென்றும் தஞ்சை மண்ணிலேயே தன்னுடன் வசிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார். அரசரின் வேண்டுகோளுக்கு செவிமடுத்த ஸ்ரீராகவேந்திரர் “நான் 12 ஆண்டுகள் தவம் செய்த இடத்தில் பிருந்தாவனம் அமையுங்கள். நான் அங்கு என் சூட்சம் சரீரத்தால் என்றென்றும் வாழ்ந்து தஞ்சைக்கு அருள்புரிவேன்” என கூறியதால், நாயக்க மன்னரால் பிருந்தாவனம் நிறுவப்பட்டது.

அதே சமயம் அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பாரில், ரகுநாத பூபால் மன்னரால் ராகவேந்திருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை நினைவு கூறும்விதமாக நேற்று தர்பாரில், மகாலில், ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு, மந்திராலய பீடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர சுவாமிகள், ஸ்ரீ ராமர் பீடத்தினை வைத்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் அருள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா சி.போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர் வடவாற்றில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar