பதிவு செய்த நாள்
30
ஜூன்
2022
04:06
துாத்துக்குடி: துாத்துக்குடி டூவிபுரம் மேல்பாகம், அண்ணாநகர் 2வது தெரு, இந்து நாடார் உறவின்முறைக்குப் பத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. கொடை விழாவின் முக்கிய நாளான கடந்த 28ம் தேதி 6 :00 மணிக்கு தீர்த்தக்கரைக்கு புறப்படுதலும், 10:00 மணிக்கு காமராஜ் கல்லுாரி எதிரில் உள்ள விநாயகர் கோயிலிருந்து பக்தர்கள், குடம் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவு மகுட கச்சேரியும், பக்தர்கள் நேமிசம் மற்றும் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து, வில்லிசையும் இரவு 12 : 0 0 மணிக்கு நையாண்டி மேளத்துடன், சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனைகளோடு, அம்பாளுக்கு விசேஷ பூஜை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாமக்கொடை விழாவும் நடந்தது. அதனை தொடர்ந்து வாண வேடிக்கையும், வில்லிசையும் நடந்தது. மற்றும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், 9 :00 மணிக்கு பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. மதியக் கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு பத்திரகாளி கோயில் நாடார் இளைஞர் அணி சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது . இன்று மாலை 6:00 மணிக்கு சிந்தனைப் பட்டிமன்றம் நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளான தர்மகர்த்தா ஜெயபால், துணை தர்மகர்த்தாக்கள் சிராஜன், அறிவழகன், செயலாளர் பச்சிராஜன், இணைச் செயலாளர்கள் ஜெயமுருகன், பாலமுருகன், பழனிக்குமார், பொருளாளர் பால்ராஜ், கோயில் கணக்காளர் மணி மற்றும் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.