Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ... இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
04:06

மதுரை : கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் ஆனந்தகுமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டபோது கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் லிங்க வடிவம் தனித் தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்த போது கி.பி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு என்பதை கண்டறிந்தார்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது: பண்டையத் தமிழர் நீர் மேலாண்மையில் சிறப்பாக பின்பற்றினார்கள். மழை நீரைச் சேமிப்பது, சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்த ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர் பங்கீடு முறை சங்க காலம் முதல் தொன்று தொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.

கலிங்கு : கலிங்கு என்பது கண்மாய் ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீர் முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம் கலிங்கல், கலிஞ்சு என்று அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்து கற்களை ஊன்றி உள்பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகளை சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயும் இடம் கலிங்கு அமைந்திருக்கும். நீர் வெளியேறும் அளவு முறையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சில இடங்களில் கண்மாய் வரத்து கால்வாய் பகுதியில் கலிங்கு அமைந்திருப்பதால் அடுத்தடுத்து நீர் நிலைகளுக்கு நீரை திருப்பி விட்டு பங்கீடு செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர் பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகளில் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்வதற்கு தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள்.

கல்வெட்டு செய்தி : உவரி பெரிய கண்மாயில் நீர் நிரம்பி வெளியேறு கிழங்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனித்தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம்,6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது. காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. உவரி பெரிய கண்மாய் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம், கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூருக்கு நீரை பணிக்கர் என்ற இனக் குழுவினர் சரிபாதி ஆக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது கண்மாயில் இருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar