இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 04:06
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது.
விருதுநகர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வளர்மதி, கோவில் ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரி அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி , முன்னிலையில் கோவிலில் இருக்கும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டது. கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் காணிக்கையை கணக்கிட்டரை். இதில் ரொக்கம் ரூ 55,05,070, தங்கம் 231. 650 கிராம், வெள்ளி 1386.900 கிராம், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. பரம்பரை அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.