அவிநாசி: அவிநாசி அருகே, குட்டகம் கிராமம், கூழேகவுண்டன்புதூரில் அமைந்துள்ள, மாணிக்கவாசக சுவாமிகளால், திருவாசகப்பாடல் பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமொக்கணீஷ்வரர் திருக்கோவில் உள்ளது. ஆனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 9.30 மணியளவில் கணபதி ஹோமமும்,தொடர்ந்து ருத்ர ஹோமம், ஏகாதச ருத்ர ஜப ஹோமம், பஞ்சமுக அர்ச்சனை, நவசக்தி அர்ச்சனையும், மஹா உபசார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிவாச்சாரியார்கள், சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.