ஸ்ரீகாளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 10:06
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான கிரி மலை மீது உள்ள வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் புணர்மைக்கும் பணி நடைபெற்று வருவதால் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி பாலாலய பூஜைகள் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து இன்று கோயில் வளாகத்தில் உள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி மரத்தை சிவன் கோயில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சாஸ்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு பேசுகையில் இக்கோயிலில்( வள்ளி தேவையான சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் )ஆடிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழா வர உள்ள நிலையில் கோயில் சீர்திருத்த பணிகள் விரைவுப் படுத்தும் வகையில் புதிய கொடி மரத்தை சிறப்பான முறையில் பிரதிஷ்டை செய்ததாக தெரிவித்தார். இம்மாத இறுதியில் ஆடி கிருத்திகை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.