Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சிபுரம் தேவகுரு குருபகவான் ... மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் தேரோட்ட விழா மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கும்பாபிஷேக விழா : விக்ரகம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கும்பாபிஷேக விழா : விக்ரகம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
11:07

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலை 6 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நேற்று தொடங்கின. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் தோற்றத்துடன் திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கிறார். நுாறாண்டுகள் கடந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று வரும் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ஒரு மாதமாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. கணபதி ேஹாமத்துக்கு பின்னர் காலை 9:00 மணிக்கு மூலவர் திருமேனியை, திருப்பணி செய்த புரோகிதர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சடங்கு நடந்தது. நேற்று காலை பாலாலய பிரதிஷ்டையில் இருக்கும் அர்ச்சனை விக்ரகம் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளிய பின், மூலவர் சன்னதியில் பூஜைகள் தொடங்கியது.  காலை 8.30 மணிக்கு கோவில் தந்திரிகள் சஜித் சங்கர நாராயணகுரு, சுப்ரமண்யரு தலைமையில் ஆதிகேசவ பெருமாளுக்கு அர்ச்சனை, விக்ரகத்திற்கு பாலாலய சன்னதியில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வரும் 6ம் தேதி காலை 6:00 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.இக்கோயில் நுாற்றாண்டுகளைக் கடந்து கும்பாபிஷேகம் காண்பதால் திருவட்டார் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவட்டார் பகுதி டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் அடைக்கப்படுகிறது. கும்பாபிஷேக தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படாது; முதலில் வருவோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், தாமதமாக வருவோர் கோயிலுக்கு வெளியே பெரிய திரையில் கும்பாபிஷேகத்தை காணலாம் என, தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar