ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 03:07
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அன்னதான திட்டத்திற்காக ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த குமாரி கிருஷ்ணா தம்பதியினர்1, லட்சத்து 116 ரூபாய் நன்கொடையை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு விடம் காசோலையாக வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.