புரி: ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோயிலின் தேர் திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது 42 நாட்கள் நடக்கும். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.