பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
05:07
பல்லடம்: பல்லடம் அருகே, சித்தம்பலத்தில் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது.
பல்லடம் வட்டம், சித்தம் லம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆறாம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா, மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா உள்ளிட்டவை துவங்கின. முன்னதாக, ஜூன் 28 அன்று இரவு, 7.00 மணிக்கு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் வினோத் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தன. விழாவில், தினசரி நடக்கும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வடிவங்களில் காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று நடந்த சிறப்பு அலங்காரத்தில், விசாலாட்சி அலங்காரத்தில் காமாட்சி அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், தேர் பவனி உள்ளிட்ட நிகழ்வுகளும் தினசரி நடைபெற உள்ளன.