திருத்தணி: திருத்தணியில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் மலைக்கோவிலுக்கு காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் சாலையோர கடை வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர்.நேற்று மாலை 6.45 முதல் இரவு 8 மணி வரை திடீரென பலத்த மழை கொட்டியது. சாலையோர கடை வியாபாரிகளும் திடீர் மழையால், கடைகளை மூடிவிட்டனர். மேலும், மழையால் பெரி, கடலை மற்றும் திண்டபங்களும் நனைந்து நஷ்டம் அடைந்தது.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஒடியது. இந்த திடீர் மழையால் பக்தர்கள் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், நனைந்த படியே மலைக்கோவிலுக்கு சென்றனர்.திருவள்ளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை திடீர் மழை பெய்தது.