திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேக, வழிபாடு நடந்தது. திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தாசில்தார்கள் பால்ராஜ், சேவியர், நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கயிறும் பிரசாதமும் வழங்கப்பட்டது. சிறப்பு பஜனை நடந்தது. *ஒய்.எம்.ஆர்.,பட்டி கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிரார்த்தனையும் நடந்தது. உறியடி திருவிழா நடந்தது. யாதவ சங்கம் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. * சீனிவாச பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்கோயில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில், ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.