பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, இன்று (ஆக.,10) நடக்கிறது.காரிமங்கலம் மலைக்கோவில் உள்ள அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* காரிமங்கலம் அடுத்த முரசுபட்டி முருகர் கோவில், அடிலம் சென்னம்பட்டி முருகர் கோவில் ஆகியவற்றில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அன்னசாரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில் உட்பட அனைத்து முருகர் கோவில்களிலும், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்துள்ளனர்.