ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு விசவனூர் பூர்ண புஷ்பகலா, சமேத பாலாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல பூஜை விழா நடைபெற்றது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.