பரமக்குடி: பரமக்குடி அருகே சோமநாதபுரம் நெசவாளர் காலனியில் ஜூலை 8 அன்று ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் இக்கோயில் நான்கு காலையாக சாலை பூஜைகளுடன் விழா நடந்தது. தொடர்ந்து அன்று முதல் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.