சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு: முன்பதிவு இன்று தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 08:07
சபரிமலை, ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 16 மாலை திறக்கப்படுகிறது. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
ஜூலை 16 மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூலை 17 அதிகாலை நடை திறந்ததும் அபிேஷகத்துக்கு பின் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஐந்து நாட்களும் படிபூஜை உண்டு. ஜூலை 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூலை 16 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.