திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 08:07
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் தேரோட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா சிறப்பாக நடக்கிறது. ஜூலை 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனை வீதியுலா நடக்கிறது. நேற்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், அப்துல்வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். முன்னதாக நள்ளிரவில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது. நெல்லையப்பர் தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி தேர் நிலை சேர்ந்தது. தொடர்ந்து காந்திமதி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.