முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 11:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவாக தினமும் காலை இரவு நேரங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. ஜூலை 8ம் தேதி கழுவன் விரட்டு திருவிழாவும். ஜூலை 9 ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும் நடந்தது. ஜூலை 10ம் தேதி இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9 ஆம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாலை 4:30 மணிக்கு பிரியாவிடையுடன் சொக்கநாதர் ஒரு தேரிலும், மீனாட்சியம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். 5:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். வழி நெடுகிலும் தேர் முன்பாக பக்தர்கள் நேர்த்திக்கடன் தேங்காய் உடைத்தனர். இரவு 7:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.