அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 11:07
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி சொக்கநாதர் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் 7.30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர், திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 6.30 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்தார். உடன் நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், கவுன்சிலர் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலாளர் மணி கலந்து கொண்டனர். தேரோடும் வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக வந்து, நிலையை அடைந்தது.