ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 12:07
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடந்தது.
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகத்துடன் உச்சிகால பூஜை நடந்தது. மதியம் 2:30 மணியளவில் சர்வ அலங்காரத்துடன் புறப்பட்ட பஞ்சமூர்த்திகளுக்கு, கோவில் முன் மண்டகப்படி பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 65 அடி உயர தேரில் சுவாமி எழுந்தருளியதைத் தொடர்ந்து 3:45 மணியளவில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணியளவில் தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இன்று 12ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், நாளை விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.